களம் இறங்கியது ராணுவம்.. வுஹானில் இருந்து திரும்பும் இந்தியர்களுக்காக.. பெரும் கூடாரம் அமைப்பு!
Recommended Video
டெல்லி: சீனாவின் வுஹானில் இருந்து திரும்பும் இந்தியர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களை தங்க வைப்பதற்கான தனி கூடாரத்தை இந்திய ராணுவம் ஹரியானாவில் அமைத்துள்ளது.
கொரோனாவைரஸ் தாக்குதலால் சீனாவின் வுஹான் நகரைத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் வுஹான் நகரில் வெளிநாட்டு மக்கள் தங்களின் சொந்த நாட்டுக்கு திரும்பி வருகிறார்கள். அந்தந்த நாடுகள் தனி விமானத்தை அனுப்பி தங்கள் நாட்டுக்கு திருப்பி அழைத்து செல்கின்றன.
இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜபபான் என அனைத்து நாடுகளுமே தங்கள் நாடுகளைச் சேர்ந்தவர்களை தனி விமானம் மூலம் அழைத்து வர முடிவு செய்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவும் வுஹான் நகரில் படித்து வரும் 300 க்கும் மேற்பட்ட மாணவர்களை இந்தியா அழைத்து வர ஏர் இந்தியா விமானம் இன்று புறப்படுகிறது. மற்றொரு விமானம் நாளை சனிக்கிழமை டெல்லியில் இருந்து புறப்படுகிறது.
வுஹானில் இருந்து இந்தியா அழைத்து வரப்படும் இந்தியர்களை இரண்ட வாரங்கள் தனியாக வைத்து கண்காணிக்க வேண்டி உள்ளது. அப்படி கண்காணிப்பதற்காக ஹரியானா மாநிலம் மானசரில் கூடாரம் அமைக்கப்படுகிறது. இதில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. மருத்துவமனை போல் படுக்கைகள் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு யாருக்கேனும் நோய் அறிகுறி தெரிந்தால் உடனே அவர்கள் டெல்லி கண்டோன்மெண்டில் உள்ள அரசு மருத்துவமனையில் இயங்கும் சிறப்பு பிரிவுக்கு மாற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications