கொரோனாவுக்கு பதஞ்சலியின் மருந்தா?.. யார் அனுமதி கொடுத்தது?.. வலுக்கும் எதிர்ப்பு
இந்தூர்: கொரோனா நோயாளிகளின் நோய் எதிர்ப்பு திறனை ஆய்வு செய்யும் பொருட்டு சோதனை அடிப்படையில் ஆயுர்வேத மருந்துகள் கொடுத்து ஆய்வு செய்ய பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை எதிர்க்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்படும் ஆங்கில மருந்துகள், சித்த மருந்துகள், ஆயுர்வேதம் என எந்த துறை மருந்துகளானாலும் அவை மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் வழிமுறைகளை வைத்தே அனுமதி அளிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகளைக் கொடுத்து அவர்களது நோய் எதிர்ப்பு திறனை ஆய்வு செய்ய பதஞ்சலி நிறுவனத்திற்கு இந்தூர் மாவட்ட ஆட்சியர் மணீஷ் சிங் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதியை பெறாமல் தன்னிச்சையாக ஆட்சியர் அனுமதி அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் வழிமுறைகள் குறித்து ஆட்சியர் அறிந்திருக்கவில்லை என்பது தெரிகிறது. தங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக நாட்டு மக்களை கினியா பன்றிகளை போல் நடத்தக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.
பதஞ்சலி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும். எந்த மருந்தாக இருந்தாலும் இந்திய பொது மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் அனுமதி பெற்றே மனிதர்களுக்கு சோதனை செய்ய வேண்டும்.
இதுகுறித்து மத்திய பிரதேச அரசை நான் தொடர்பு கொண்டு கேட்டபோது அது போல் பதஞ்சலி நிறுவனத்திற்கு எந்தவித அனுமதியும் தரவில்லை என்றது. இதையடுத்து இந்தூர் ஆட்சியரிடம் பேசினேன். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்றார் திக்விஜய சிங்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications