சூரத்தில் இருந்து பிற மாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் சிறப்பு பேருந்துகளில் புறப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

சூரத்: குஜராத்தின் சூரத் நகரில் இருந்து நூற்றுக்கணக்கான பிற மாநில தொழிலாளர்கள் சிறப்பு பேருந்துகளில் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டனர்.

நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் மே 3-ந் தேதியுடன் முடிவடைகிறது.

Coronavirus Lockdown: Surat migrant workers left for native

அதேநேரத்தில் ஒரு மாத காலமாக பிற மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும் துயரங்களுக்குள்ளாகி வருகின்றனர். அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க கோரி குஜராத்தின் சூரத், தெலுங்கானாவின் ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

அத்துடன் மாநில அரசுகளும் பிற மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தின. இதனடிப்படையில் சூரத்தில் இருந்து ஒடிஷா, உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

Coronavirus Lockdown: Surat migrant workers left for native

இதற்கான சிறப்பு பாஸ்களும் வழங்கப்பட்டன. இதனிடையே மேலும் நூற்றுக்கணக்கானோர் தங்களுக்கு அடிப்படை வசதி கோரி சூரத் நகரில் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

ராஜஸ்தானின் கோட்டா

இதனிடையே ராஜஸ்தானின் கோட்டா நகரில் படித்து வந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் 2,000 மாணவர்கள் சிறப்பு பேருந்துகள் மூலம் ராய்ப்பூர் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ராய்ப்பூரில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+