ஓமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு: ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை!
புவனேஸ்வர்: ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளன. ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்ட்டாட்டங்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தியாவில் 358 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருந்து வருகிறது.
2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களுக்கும் ஓமிக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால்தான் ஓமிக்ரான் பரவல் அதிகரித்திருக்கிறது என்கிறது மத்திய அரசு.

இரவு நேர ஊரடங்கு
ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் மற்றும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிஷா அரசு
இந்நிலையில் ஒடிஷா மாநில அரசு, ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக ஒடிஷா மாநில தலைமைச் செயலாளர் மொகபாத்ரா கூறியதாவது: ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கொரோனா கால கட்டுப்பாடுகளைப் பின்பற்றி கலந்து கொள்ள முடியும். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பு உத்தரவுகளை பிறப்பித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ந் தேதி இரவில் புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன. திருமணங்களைத் தவிர இதர கொண்டாட்டங்கள், விழாக்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது.

ஒடிஷாவில் 4 பேருக்கு பாதிப்பு
துக்க நிகழ்ச்சிகள் கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட வேண்டும். சமூக ஒன்றுகூடல்கள், விருந்துகள், இசை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்த அனுமதி கிடையாது. அனைத்து நிகழ்வுகளையும் மாவட்ட நிர்வாகங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு மொகபாத்ரா கூறினார். ஒடிஷாவில் ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக பதிவாகி இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications