சீனாவில் நிலைமை மோசம்.. கொரோனா எங்கெல்லாம் பரவுகிறது என சொல்ல முடியாது.. WHO ஷாக்!
Recommended Video
முனிச் : கொரோனா வைரஸ் தொற்று இன்னும் சீனாவுக்கு ஒரு அவசரநிலையாக உள்ளது என்றும் இந்த தொற்றுநோய் எங்கு பரவுகிறது என்று சொல்ல முடியாது என்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சனிக்கிழமை தெரிவித்தார்.
2002- 2003ல் சீனாவை தாக்கிய சார்ஸ் வைரஸ் தொற்றை போல் சரியாக 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வந்துள்ளது கொரோனா வைரஸ்.
சார்ஸ் வைரஸ் எப்படி பரவியது, எப்படி போனது இது வரையிலும் புரியாத புதிர் தான்.. அதற்கு இன்று வரை மருத்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மை.

6800 பேர் பாதிப்பு
இந்தசூழலில் இப்போது வந்துள்ள கொரோனா வைரஸ் தொற்றும் எப்படி பரவியது என்பதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை. இந்த கொடூரவைரஸ் தாக்குதலால் சீனாவில் இன்று காலை நிலவரப்படி 68000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 1665 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2009 பேரை புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 142 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

500 பேருக்கு பாதிப்பு
சீனாவை தவிர பிரான்ஸ், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்பட 30 நாடுகளில் சுமார் 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.4 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். இந்த வைரஸ் பீதி இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்பட பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

உலக சுகாதார அமைப்பு
இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள முனிச்நகரில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து கூறுகையில், "கொரோனா வைரஸ் தொற்று இன்னும் சீனாவுக்கு ஒரு அவசரநிலையாக உள்ளது. இந்த தொற்றுநோய் எங்கு பரவுகிறது என்று சொல்ல முடியாது. இந்த வைரஸ் பரவுவதை குறைக்க தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் கவலை அளிக்கிறது" என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறினார்.

இந்தியாவில் எப்படி
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு வயதான சீன சுற்றுலாப் பயணி பிரான்சில் இறந்துவிட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர், இது ஐரோப்பாவில் முதல் மரணமாகவும், சீனாவுக்கு வெளியே நான்காவது மரணமாகவும் அமைந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 3 பேர் கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். துபாயில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்துள்ளன.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications