சீனாவில் நிலைமை மோசம்.. கொரோனா எங்கெல்லாம் பரவுகிறது என சொல்ல முடியாது.. WHO ஷாக்!
Recommended Video
முனிச் : கொரோனா வைரஸ் தொற்று இன்னும் சீனாவுக்கு ஒரு அவசரநிலையாக உள்ளது என்றும் இந்த தொற்றுநோய் எங்கு பரவுகிறது என்று சொல்ல முடியாது என்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சனிக்கிழமை தெரிவித்தார்.
2002- 2003ல் சீனாவை தாக்கிய சார்ஸ் வைரஸ் தொற்றை போல் சரியாக 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வந்துள்ளது கொரோனா வைரஸ்.
சார்ஸ் வைரஸ் எப்படி பரவியது, எப்படி போனது இது வரையிலும் புரியாத புதிர் தான்.. அதற்கு இன்று வரை மருத்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மை.

6800 பேர் பாதிப்பு
இந்தசூழலில் இப்போது வந்துள்ள கொரோனா வைரஸ் தொற்றும் எப்படி பரவியது என்பதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை. இந்த கொடூரவைரஸ் தாக்குதலால் சீனாவில் இன்று காலை நிலவரப்படி 68000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 1665 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2009 பேரை புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 142 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

500 பேருக்கு பாதிப்பு
சீனாவை தவிர பிரான்ஸ், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்பட 30 நாடுகளில் சுமார் 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.4 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். இந்த வைரஸ் பீதி இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்பட பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

உலக சுகாதார அமைப்பு
இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள முனிச்நகரில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து கூறுகையில், "கொரோனா வைரஸ் தொற்று இன்னும் சீனாவுக்கு ஒரு அவசரநிலையாக உள்ளது. இந்த தொற்றுநோய் எங்கு பரவுகிறது என்று சொல்ல முடியாது. இந்த வைரஸ் பரவுவதை குறைக்க தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் கவலை அளிக்கிறது" என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறினார்.

இந்தியாவில் எப்படி
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு வயதான சீன சுற்றுலாப் பயணி பிரான்சில் இறந்துவிட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர், இது ஐரோப்பாவில் முதல் மரணமாகவும், சீனாவுக்கு வெளியே நான்காவது மரணமாகவும் அமைந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 3 பேர் கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். துபாயில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்துள்ளன.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications