ஊழல் மனித உரிமைகளுக்கு எதிரானது: ஜெ. மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கூறிய தீர்ப்பு

ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணையை தள்ளுபடி செய்த கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி சந்திரசேகரா, அளித்த தீர்ப்பின் சாராம்சம் வருமாறு:
ஊழல் வழக்குகளில் கடினமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் கருத்தாக உள்ளது. ஆனால் அரசு தரப்பு வக்கீல், திடீரென குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் பெரும் ஊழல் செய்தவர்கள் என்பது சாட்சியங்கள் வாயிலாக கீழ் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறப்பு கோர்ட் நீதிபதி தனது தீர்ப்பில் மிக விளக்கமாக இந்த தண்டனை எதற்காக என்பதை தெரிவித்துள்ளார்.
எனவே அரசு தரப்பு வழக்கறிஞர் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தாலும், குற்றவாளிகளை ஜாமீனில் விடுதலை செய்ய கோர்ட்டுக்கு விருப்பமில்லை. லாலுபிரசாத் யாதவ் வழக்கை ஜெயலலிதா வக்கீல் சுட்டிக்காட்டி உடனடியாக ஜாமீன் வழங்க கேட்டார். ஆனால் லாலு பிரசாத் கூட பல நாட்கள் சிறையில் இருந்து தான் ஜாமீன் பெற்றார்.
ஊழல் என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி இவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது. இவர்களுக்கு கருணை காட்ட முடியாது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications