டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது பாஜக.. மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது காங்கிரஸ்
டெல்லியில் நடைபெற்ற மூன்று மாநகராட்சிக்கான தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி இரண்டாம் இடமும், காங்கிரஸ் கட்சிக்கு மூன்றாம் இடமும் கிடைத்துள்ளன.
டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக 184 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இது ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு நகராட்சிகளில் உள்ள 272 வார்டுகளில் 270 வார்டுகளுக்கு ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

கிழக்கு டெல்லியின் மஜ்பூர் மற்றும் வடக்கு டெல்லியின் சராய் பிபால் தலா உள்ளிட்ட வார்டுகளில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் உயிரிழந்ததையடுத்து அந்த இரண்டு வார்டுகளுக்கும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் 270 வார்டுகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத் தேர்தலில் 57 சதவீதம் வாக்குகள் பதிவானது.
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 181 வார்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியால் 48 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. காங்கிரஸ் கட்சி 30 இடங்களை கைப்பற்றி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
பாஜகவின் வெற்றி காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. அக்கட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புணர்வே தேர்தல் தோல்வி வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று தனது டெல்லி காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அஜய் மக்கான் அறிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications