கோர்ட்டுக்கு வராவிட்டால் குண்டுக்கட்டாக தூக்கிவர உத்தரவு: சரிதா நாயருக்கு நீதிபதி கெடுபிடி
திருவனந்தபுரம்: கோர்ட்டுக்கு விசாரணைக்கு வராமல் புறக்கணித்தால் குண்டு கட்டாக தூக்கி வர உத்தரவிடுவேன் என நீதிபதி கண்டித்ததால் சரிதா நாயர் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணை கமிஷன் முன் சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜி ராதாகிருஷ்ணன் ஆதியோர் ஆஜாராகி வாக்குமுலம் அளித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் சரிதா நாயர் கோர்ட்டில் ஆஜாரான போது முதல்வர் உம்மன்சாண்டிக்கு ரூ.1.90 கோடியும், மின்துறை அமைச்சர் ஆர்யடன் முகமதுவுக்கு ரூ.40 லஞ்சமும் கொடுத்ததாக கூறியது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.
இந்த விசாரணை கமிஷன் பதவி காலம் முடிய இன்னும் ஓருசில மாதங்களே இருப்பதால் கமிஷன் கூறும் நாட்களில் உடனே ஆஜாராகி ஆதாரங்களை ஓப்படைக்க வேண்டு்ம் என சரியா நாயருக்கு நீதிபதி சிவராஜன் உத்தரவிட்டார். ஆனால் ஓரு சில நாட்கள் மட்டுமே சரிதா நாயர் ஆஜரானார். சில தினங்களாக வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து நேற்று ஆஜாராக வேண்டும் என நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்திருந்தார். ஆனால் தொண்டை வலி இருப்பதால் ஒரு வாரத்திற்கு தன்னால் வரமுடியாது என சரியா நாயர் அவரது வக்கீல் மூலம் கமிஷனுக்கு தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதி சிவராஜன் கூறுகையில், விசாரணை கமிஷன் முன்தொடர்ந்து ஆஜாராகாமல் இருக்கும் சரிதா நாயரை கோர்ட் நினைத்தால் குண்டு கட்டாக தூக்கி வர முடியும். எனவே நாளை கண்டிப்பாக கோர்ட்டில் சரிதா நாயர் ஆஜாராக வேண்டும் எனவும் இல்லாவி்ட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரித்தது சரிதா நாயரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications