அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக ஸ்மிருதி இரானிக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அவதூறு வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராக மத்திஅய் அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டில் குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானபோது தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய ஸ்மிருதி இரானி, தன்னைப் பற்றி தவறான கருத்துக்களையும் அவதூறான வார்த்தைகளையும் கூறினார் என்று குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. சஞ்சய் நிருபம் டெல்லி பெருநகர குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீரஜ் மித்தல், ஸ்மிருதி இரானியை செப்டம்பர் 27ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து ஸ்மிருதி இரானிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications