இவருமா இப்படி.. அரசியலில் அம்பத்தி ராயுடு என்ட்ரியாம்.. எந்த கட்சி தெரியுமா?
ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரருமாக விளங்கிய அம்பத்தி ராயுடு, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் அவர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரருமாக விளங்கிய அம்பத்தி ராயுடு நடப்பு ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டிற்கு முழுக்கு போடுவதாக அறிவித்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சூட்டோடு சூடாக அரசியல் களத்தில் கால் பதிக்க அம்பத்தி ராயுடு முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அம்பத்தி ராயுடு அண்மையில் இருமுறை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். அது மட்டும் இன்றி ஜெகன் மோகன் ரெட்டியை புகழ்ந்தும் பேசியிருந்தார். இதனால், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் ராயுடு விரைவில் இணைய இருப்பதாக ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
அம்பத்தி ராயுடு குண்டூர் அல்லது கிருஷ்ணா ஆகிய இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவதை உறுதி செய்வதை ராயுடு அளித்த ஒரு பேட்டியும் மறைமுகாக உறுதி செய்யும் வகையில் இருந்தது. அதாவது அம்பத்தி ராயுடு அளித்த பேடியில், " அரசியலில் நுழைய விரும்பும் இளைஞர்களுக்கு பெரும் ஊக்க சக்தியாக ஜெகன் மோகன் ரெட்டி இருப்பதாகவும் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை ஜெகன் மோகன் ரெட்டி எடுத்துச்செல்வதாகவும் கூறியிருந்தார்.
எனவே, விரைவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என்று தெரிகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த அம்பத்தி ராயுடு, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு அறிவித்தாலும் பிற வெளிநாட்டு 20 ஓவர் லீக் தொடர்களில் அவர் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications