Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல நடிகர் அவரா.. "வெள்ளைக்குதிரை".. உல்லாசத்தால் உச்சம்தொட்ட அர்ச்சனா.. அதிகாரிகளின் அடுத்த ஆப்பு

அர்ச்சனா நாக்கின் சொத்துக்களை அதிகாரிகள் மீண்டும் முடக்கி உள்ளனர்

Subscribe to Oneindia Tamil

புவனேஷ்வர்: சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, 26 வயதே ஆன பெண் ஒருவர் சிறைக்கு சென்றுள்ளார்.. இதையடுத்து, அவரது சொத்துக்களை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்தவர் ஜெக்பந்து சந்த்... இவர் பழைய கார், பைக்குகளை மறுவிற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்... மனைவி பெயர் அர்ச்சனா நாக். 26 வயதாகிறது.

இவர் ஒரு பியூட்டிஷியன்.. இவருக்கு திடீரென ஆடம்பர வாழ்க்கை மீது ஆசை வந்துவிட்டது.. குறுக்கு வழியில் மட்டுமே சீக்கிரமாக பணம் சம்பாதிக்க முடியும் என்று நம்பினார்..

 அரண்மனை குதிரை

அரண்மனை குதிரை

அதற்காக, தன்னுடைய கணவருடன் சேர்ந்து அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமாதயாரிப்பாளர்கள், மற்றும் பிரபலமானவர்களை குறி வைத்து, மோசடியில் இறங்கி உள்ளனர்.. கார், பைக் விற்பனை மூலமாகவே, அர்ச்சனாவும் கணவரும் இந்த ரூட்டை பிடித்தனர்.. ஒடிசாவில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்களுடன் வலிய சென்று அறிமுகம் செய்து கொண்டார்கள்.. பிறகு, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா பிரமுகர்களுக்கு, இளம்பெண்களை பாலியல் உறவுக்காக அனுப்பி வைத்துள்ளனர்... அந்த பெண்களுடன், இவர்கள் எல்லாம் நெருக்கமாக இருக்கும்போது, மறைந்திருந்து அவைகளை வீடியோவாக அர்ச்சனா எடுத்து வைத்துக் கொண்டார்.

 வெள்ளைக்குதிரை

வெள்ளைக்குதிரை

அந்த அந்தரங்க போட்டோக்கள், வீடியோக்களை வெளியிடாமல் இருக்கவேண்டுமானால், தான் கேட்ட பணத்தை தரவேண்டும் என்று அர்ச்சனா அந்த பிரபலங்களை மிரட்டியுள்ளார்.. இவர்களின் மிரட்டலுக்கு பயந்துகொண்டு, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களும், அவர்கள் கேட்ட பணத்தை தந்துள்ளனர்.. இப்போது அர்ச்சனாவுக்கு தான் ஆசைப்பட்ட சொகுசு வாழ்க்கை கிடைத்துவிட்டது.. இறக்குமதி செய்யப்பட்ட அலங்காரப் பொருள்கள், சொகுசு கார்கள், நான்கு விலையுயர்ந்த நாய்கள், ஒரு வெள்ளைக் குதிரையுடன் ஓர் அரண்மனை போன்ற வீட்டை வாங்கி, குட்டி சாம்ராஜ்யத்தை நடந்த துவங்கினார்.

உல்லாசம்

உல்லாசம்

அர்ச்சனாவும், அவரது கணவரும் கோடிகளில் புரண்டனர்.. தொடர்ந்து தங்கள் மிரட்டல்களையும் தொடர்ந்தனர்.. இப்படித்தான் ஒரு சினிமா பைனான்சியரும் இவர்களிடம் சிக்கினார்.. அவருக்கும் பெண்களை அனுப்பி உல்லாசமாக இருக்க செய்து, அதை வீடியோ எடுத்து வைத்து கொண்டு, 3 கோடி ரூபாய் வேண்டும் என்று அர்ச்சனா மிரட்டி உள்ளார்.. ஆனால், இந்த தயாரிப்பாளரோ, நேராக போலீசுக்கு போய்விட்டார். கடந்த வருடம் இது தொடர்பாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கடந்த அக்டோபர் 6-ம் தேதி அர்ச்சனா தம்பதி கைதானார்கள்..

பிரபலங்கள்

பிரபலங்கள்

2 பேருமே இப்போதுவரை ஜெயிலில்தான் இருக்கிறார்கள்.. அர்ச்சனாவிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது.. அப்போது மொத்த உண்மையையும் அர்ச்சனா போலீசாரிடம் சொல்லி உள்ளார்.. அரசியல்வாதிகள் அதாவது, எம்பி, எம்எல்ஏக்கள், சினிமா பிரபலங்கள், பணக்காரர்கள், இப்படி பல பேர் அர்ச்சனாவிடம் சிக்கி உள்ளதும் அம்பலமானது.. அவர்களின் பெயர்களை எல்லாம் கேட்டு போலீசார் இவர்களா என்று அதிர்ந்து போனார்களாம்.. பணமோசடி என்பதால் இந்த வழக்கை அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது.

 சொகுசு பங்களா

சொகுசு பங்களா

இப்படிப்பட்ட சூழலில், பணமோசடி வழக்கில், அர்ச்சனாவின் சொகுசு வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது... புவனேஷ்வரில் உள்ள 3.64 கோடி ரூபாய் மதிப்பிலான அர்ச்சனாவின் வீட்டை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அர்ச்சனாவின் 56 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.. அர்ச்சனாவிடம் மாட்டிக் கொண்ட, அந்த பிரபலங்கள் குறித்தும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

 18 எம்எல்ஏக்கள்

18 எம்எல்ஏக்கள்

முக்கிய அரசியவாதிகளின் பின்னணியில்தான் அர்ச்சனாவின் அனைத்து மோசடிகளும் நடந்துள்ளதாக தெரிகிறது.. இதில், ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்களுக்கு பெரும்பங்கு இருப்பதாகவும், இதனால் 22 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் நவீன் பட்நாயக் அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் சில நாட்களுக்கு முன்பு குற்றஞ்சாட்டியிருந்தார்.. அதுமட்டுமல்ல, 18 எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட மொத்தம் 25 அரசியல்வாதிகள் இதில் ஈடுபட்டுள்ளதாகவும், அதில் பெரும்பான்மையானவர்கள் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பாஜக தலைவர்களுள் ஒருவரும் குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

 நட்சத்திர சினிமா

நட்சத்திர சினிமா

மேலும் அவர்களை எல்லாம் தப்ப வைக்க முயற்சி நடப்பதாகவும் பகீரை கிளப்பி இருந்தார்.. ஆனால், இதை முற்றிலுமாக மறுத்துள்ள ஆளும் கட்சி, அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்று பதிலடி தந்திருந்தது.. அதேபோல, அர்ச்சனாவின் வலையில் விழுந்த நடிகர்கள் யார் என்ற லிஸ்ட்டும் எடுக்கப்பட்டு வருகிறதாம்.. இவ்வளவு அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய அர்ச்சனாவின் கதையை, பிரபல ஒடியா டைரக்டர், ஸ்ரீதர் மார்தா சினிமாவாக எடுக்க உள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+