இலவசங்கள் எனும் குறுக்கு வழி அரசியல் நாட்டை நாசமாக்கிவிடும்.. பிரதமர் மோடி அட்டாக்
ராஞ்சி : குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்துவிடும் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, குறுக்குவழி அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் 657 ஏக்கர் பரப்பளவில் 401 கோடி ரூபாய் செவில் தியோகர் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் திறப்பு விழாவுக்காக ஜார்கண்ட் வந்த பிரதமர், சாலை மார்க்கமாக தியோகர் நகருக்குச் சென்றார். அப்போது, வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் அவரை வரவேற்றனர். காரின் கதவை திறந்து, நின்றபடியே வரவேற்பை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, புதிதாக கட்டப்பட்ட தியோகர் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அத்துடன், தியோகர்-கொல்கத்தா இடையேயான இன்டிகோ விமானத்தின் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு மற்றும் ஆபரேஷன் தியேட்டர் சேவைகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், 16,800 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
தியோகர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில், பல குறுக்குவழிகள் உள்ளதால், குறுக்கு வழி அரசியலில் இருந்து தள்ளி நிற்கவேண்டும் என வலியுறுத்தினார். குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்துவிடும் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, குறுக்குவழி அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களை பிரதமர் மோடி குறுக்கு வழி அரசியல் என விமர்சித்தார்.
ஜார்கண்ட் மட்டும் இன்றி இந்த திட்டங்கள் மூலம் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளுக்கும் பயனளிக்க முடியும் என கூறினார். தியோகர் விமான நிலையம் தங்களின் நீண்ட கால கனவு எனவும், அது தற்போது நிறைவேறியுள்ளதாகவும் பிரதமர் கூறினார்,












Click it and Unblock the Notifications