நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்ட சிபிஆர்எப் வீரர்: பணி நீக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரரின் கையிலிருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உயர் பாதுகாப்பு வளையத்துக்குட்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, ரிசர்வ் படை போலீஸ்காரர் ஒருவர், தனது பணி முடிந்ததால், துப்பாக்கியை ஆயுத காப்பகத்தில் ஒப்படைக்க சென்றார்.
அப்போது, அவரது துப்பாக்கி தற்செயலாக வெடித்தது. அடுத்தடுத்து 4 குண்டுகள் சீறிப் பாய்ந்தன. அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பந்தப்பட்ட போலீஸ்காரரும், அவருடைய மேற்பார்வையாளரும் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications