400 ஆண்டுகளாக பிரசவம் நடக்காத மத்திய பிரதேச கிராமம்... கடவுளின் சாபம் என மக்கள் நம்பிக்கை
மத்திய பிரதேசத்தில் சங்கா ஷியாம் ஜி கிராமத்தில் கடவுளின் சாபம் காரணமாக 400 ஆண்டுகளாக பிரசவம் நடப்பதில்லை.
Recommended Video

போபால்: மத்திய பிரதேசத்தில் சங்கா ஷியாம் ஜி கிராமத்தில் கடவுளின் சாபம் காரணமாக 400 ஆண்டுகளாக பிரசவம் நடப்பதில்லை. அவ்வாறு நடந்தால் குழந்தையோ அல்லது தாயோ மரணமடைவர் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
ராஜ்கார் மாவட்டத்தில் உள்ளது சங்கா ஷியாம் ஜி கிராமம். இந்த கிராமத்தில் 400 ஆண்டுகளாக பெண்களுக்கு பிரசவமே நடப்பதில்லை என்று கூறப்படுகிறது. அவசர காலங்களில் இந்த கிராம எல்லைக்கு வெளியே ஒரு மண்டபத்தில் பிரசவம் நடப்பதாக கூறப்படுகிறது.

இறப்பு நேரிடும்
இந்த வினோதமான நடைமுறை குறித்து அந்த ஊர் பெரியவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: கடந்த 400 ஆண்டுகளாக எங்கள் ஊரில் வைத்து பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதில்லை. அவ்வாறு பார்த்தால் குழந்தை ஊனமாகமோ அல்லது குழந்தை அல்லது தாய் இறப்போ நேரிடும் என்பது எங்கள் நம்பிக்கை.

குழந்தைகள் இறப்பு
16-ஆவது நூற்றாண்டில் எங்கள் கிராமத்தில் ஒரு கோயில் கட்டும் பணிகள் நடந்து வந்தது. அப்போது ஒரு பெண் கோதுமை அரைத்தது அந்த பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் அந்த கடவுள் சாபமிட்டதாகவும் அது முதல் அங்கு பிறக்கும் குழந்தைகள் இறந்துவிடுவதாகவும் நம்பப்படுகிறது.

அவசர காலங்களில்
பிரசவம் பார்க்க வேண்டுமானால் கிராம எல்லையில் வைத்து பார்ப்போம். இல்லாவிட்டால் இதற்கென ஒரு தனி அறை கட்டப்பட்டு வருகிறது. பெரும்பாலும் 90 சதவீத பிரசவம் மருத்துவமனைகளில் நடந்து விடும் அவசர காலங்களில் மட்டும் கிராம எல்லைக்கு வெளியே பார்க்கப்படும்.

வாய்மொழி
கடவுள் சாபம் குறித்து எந்த குறிப்புகளும் இல்லை. எனினும் எங்கள் மூதாதையர்கள் வாய்மொழியாக சொன்னதுகேற்ப நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்று அந்த ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications