நெருங்கி வருகிறது பாய்லின் புயல்.. ஆந்திரா, ஒரிசாவில் ராணுவம் உஷார்
புவனேஸ்வர்: பாய்லின் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இந்தப் புயல் ஆந்திரா மற்றும் கடலோர ஒரிசா இடையே சனிக்கிழமை கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரு மாநில கடலோரப் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் ராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு ஒரிசாவைப் புயல் தாக்கியபோது எழுந்த அலைகளை விட அதிக உயரத்தில் அலைகள் இந்த முறை எழும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. 99 புயலின்போது ஒரிசாவில் 15,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 205 முதல் 215 கிலோமீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 மாநிலங்களிலும் ஐந்து மாவட்டங்களுக்கு ஆபத்து
ஆந்திராவைப் பொறுத்தவரை ஸ்ரீகாகுளம், ஒரிசாவில் கஞ்சம், பூரி, கொர்தா, ஜகதீஷ்சிங்காபூர் ஆகிய மாவட்டங்களில் புயல் பாதிப்பு கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

முப்படைகளும் தயார்
புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்கவும், நிவாரணப் பணிகளில் ஈடுபடவும் ராணுவம், கடற்படை, விமானப்பட ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பேய் மழை
புயல் நெருங்கி விட்டதால் இரு மாநில கடலோரப் பகுதிகளிலும் பேய் மழை பெய்து வருகிறது கடலோரப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புயல் தாக்கும்போது அவசரகாலப் பணிகளுக்காக ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் இரு மாநிலங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

நாளை மேலும் மழை வலுக்கும்
நாளை இரு மாநில கடலோரப் பகுதிகளிலும் மேலும் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு விடுமுறைகள் ரத்து
அடுத்த மாதத்திற்கான அரசு விடுமுறைகளை இரு மாநில அரசுகளும் ரத்து செய்துள்ளன. அனைத்து அரசு ஊழியர்களும் பணியில் இருக்குமாறும், புயல் நிவாரணப் பணிகளில் அவர்கள் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications