அடேங்கப்பா... வங்க கடலில் கிளம்பி கோவா அருகே அரபிக் கடலில் நாளை கரையை கடக்கும் வர்தா புயல்!
வங்கக் கடலில் உருவான வர்தா புயல் தற்போது கர்நாடகாவில் பயணிக்கிறது. இப்புயல் நாளை கோவாவில் அரபிக் கடலில் கரையை கடக்கிறது.
பெங்களூர்: சென்னையில் ருத்ரதாண்டவமாடிய வர்தா புயல் நேற்று இரவு முதலே பெங்களூரை பதம் பார்க்க தொடங்கியது. இன்று கர்நாடகா மாநிலப் பகுதிகளை தாக்கிவிட்டு நாளை கோவா வழியாக அரபிக் கடலில் கரையை கடக்கிறது வர்தா புயல்.
வர்தா புயல்... இது ஏற்படுத்தியிருக்கும் வடுவை சென்னை மாநகரம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது... பேரிரைச்சலுடன் கனமழை, பேய்க்காற்று, தூக்கி எறியப்பட்ட வாகனங்கள், பெயர்ந்து விழுந்த கட்டிட முகப்புகள்.. முடங்கிப் போன இயல்பு வாழ்க்கை, மின்சாரமே இல்லாமல் 3 நாட்களாக தொடரும் துயம்.. இத்தனையும் வர்தா புயல் வாரிக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறது.

இப்புயல் நேற்று இரவு 7 மணிக்கு கரையை முழுமையாக கடந்தது. கரையைக் கடந்த புயலானது திருவண்ணாமலை மாவட்டம் வழியாக பெங்களூருவையும் தட்டிப் பார்த்தது. பெங்களூருவில் விடிய விடிய மழையை தந்திருக்கும் வர்தா இன்று கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகளைத் தாக்க உள்ளது.
இதன் பின்னர் நாளை தெற்கு கோவா வழியாக அரபிக் கடலில் கரையை கடக்கிறது வர்தா புயல் என்று கோவா வானிலை ஆய்வு மைய இயக்குநர் எம்.எல். ஷாஹூ தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடலில் கிளம்பி தரைவழியாக கர்நாடகாவைத் தாக்கி கோவாவில் அரபிக் கடலில் கரையைக் கடக்கிற அளவுக்கு மிகப் பெரிய புயலாக இருந்துள்ளது 'வர்தா'.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications