விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசால் நிறைவேற்ற முடியும்.. செய்ய மறுக்கிறது.. டி.ராஜா குற்றச்சாட்டு
விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசால் நிறைவேற்றக் கூடிய கோரிக்கைகள்தான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி: தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று 14ம் நாளாக போராடி வருகின்றனர். அவர்களை நேரில் சந்தித்து டி. ராஜா ஆதரவு தெரிவித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விவசாயிகளின் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் பேசியது மட்டுமல்லாமல் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை சந்திப்பதற்கும் விவசாயப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்றோம். அவரிடமும் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பின்னரும் எந்த விதமான முயற்சியையும் மத்திய அரசு மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இன்றைக்கும் நாடாளுமன்றத்தில் தமிழக விவசாயிகள் படுகின்ற அல்லல் அவலங்களை எடுத்துக்காட்டி அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வலியுறுத்தியுள்ளேன்.

டெல்லியில் போராட்டம்
தமிழக விவசாயிகள் கடன் தொல்லைக்கு ஆளாகி ஆங்காங்கே தற்கொலை செய்து கொண்டனர். இந்த சூழலில் தான் அவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். விவசாயப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

பரிதாப நிலை
விவசாயிகள் பெரும் இழப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள். அந்த இழப்பிற்கேற்ற நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். விவசாயிகள் இருக்கும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். எனவே, அவர்களின் பரிதாபகரமான நிலையைப் புரிந்து கொண்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தவறி வருகிறது.

நெருக்கடியில் விவசாயம்
இன்றைக்கு விவசாயம் பெரும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது என்பதை அங்கீகரக்க வேண்டும். நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒன்று விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இரண்டு விவசாய இடுபொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. மற்றொன்று விவசாயத்திற்கான நீர் ஆதாரங்கள் இல்லாமல் போய்விட்டது.

செய்ய வேண்டியது என்ன?
குறிப்பாக தமிழ்நாடு வறட்சிக்கு ஆளாகியுள்ளது. காவிரி நீர் பிரச்சனை தீர்க்கப்பட வில்லை. எனவே, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். வங்கிக்கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மூன்றாவதாக விவசாய இடுபொருட்களின் விலை நியாயமான விலையில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும்.

அக்கறையின்மை
இந்தக் கோரிக்கைகள் அனைத்துமே மத்திய அரசால் செய்யக் கூடிய ஒன்றுதான். ஆனால் மத்திய அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை. குறிப்பாக தமிழக விவசாயிகள் மீது அக்கறை இல்லை. அதனால்தான் தமிழக விவசாயம் இந்த அளவிற்கு நொடிந்து போயிருக்கிறது. இதில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பிரச்சனை தீர்க்க வேண்டும் என்று டி. ராஜா கோரியுள்ளார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications