”குளிருது டார்ஜிலிங்... குவியுது கூட்டம்”- மீண்டும் சூடுபிடிக்கும் சீசன்...
டார்ஜிலிங்: டார்ஜிலிங்கில் ‘குளுகுளு' சீசன் ஆரம்பித்துள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டார்ஜிலிங் அதன் சீதோஷ்ண நிலைக்காகவும், பனி படர்ந்த ரம்மியமான இயற்கைச் சூழ்நிலைகளுக்காவும் சுற்றுலாப் பயணிகளால் மிகவும் விரும்பப்படும் ஒரு இடமாகும்.
ஆனால், கடந்த சில வருடங்களுக்கு முன் நிலவிய தனி மாநிலப் பிரச்சினைகளில் டார்ஜிலிங் தன்னுடைய சுற்றுலா முக்கியத்துவத்தை இழந்திருந்தது. அரசியல் கொந்தளிப்பின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அங்கு வெகுவாகக் குறைந்தது.

இயற்கையின் கருணை:
அதனை மீண்டும் சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக மாற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொண்ட முயற்சிக்கு இந்த ஆண்டு இயற்கையின் கருணையும் கிட்டியுள்ளது.

திரும்ப கிடைத்த ஆனந்தம்:
கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு அங்கு மீண்டும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இதன் விளைவாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சொர்க்கலோகம் டார்ஜிலிங்:
பொதுவாக ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மத்தியில் முடியும் சுற்றுலா பருவம் இந்த ஆண்டு பனிப்பொழிவை முன்னிட்டு தற்போதே தொடங்கியுள்ளது.

தொடரும் பனிப்பொழிவு:
கடந்த ஞாயிறன்று ஜோர்பங்ளோ பகுதியில் உள்ள டைகர் மலைப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு நீடித்த பனிப்பொழிவினால் இரண்டு அங்குல உயரத்திற்கு அங்கு பனி படர்ந்து காணப்பட்டது.

வெயில் ஓடி போயாச்சு:
கடந்த சில நாட்களாக 3-4 டிகிரி செல்சியஸ் அளவிலேயே காணப்பட்ட வெப்பநிலை நேற்று 8 டிகிரி என்ற அளவில் உயர்ந்ததாகக் கூறப்படுகின்றது.

பொழியட்டும் பனிமழை:
எனினும் நேற்று இரவு அதிகரித்த பனிப்பொழிவினால் வெப்பம் 2 டிகிரியாகக் குறைந்தது மட்டுமின்றி டார்ஜிலிங்கிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேலும் பனிப்பொழிவு குறித்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications