For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகள் மீது பலாத்கார முயற்சி: நடவடிக்கை எடுக்காத போலீஸை கண்டித்து தந்தை தற்கொலை

By Veera Kumar
Google Oneindia Tamil News

லக்னோ: மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியில் வசிக்கும் மைனர் சிறுமியை சில தினங்களுக்கு முன்பு ஒரு கும்பல் தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது. இதுகுறித்து காவல்துறையிடம் அச்சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மனமுடைந்த சிறுமியின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

சிறுமியின் தாய் இதுபற்றி கூறுகையில், காவல்துறை மட்டுமல்லாமல், உள்ளூர் பஞ்சாயத்தும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் பிரச்சனையை காதுகொடுத்து கேட்கவும் யாரும் தயாராக இல்லை.

நாங்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இதுபோன்ற வேறுபாடு காண்பிக்கப்படுகிறது. எனது கணவன் சாவுக்கு இவர்கள்தான் காரணம். எனது மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார்.

English summary
Upset by the lack of action by authorities after his daughter was allegedly sexually assaulted, a man has committed suicide in Utterpradesh.
 The police did not help us at all, they did not hear our pleas. They're responsible for my husband's death said the man's wife.
 
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X