கட்டப் பஞ்சாயத்து: தலைமறைவு தாதா தாவூத் இப்ராகிம் சகோதரர் மும்பையில் கைது
Subscribe to Oneindia Tamil
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் சகோதரர் இக்பால் கஸ்கர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு நெருக்கமான 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு, மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புள்ளது. எனவே பாகிஸ்தானில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலைியல் அவரது சகோதரர், இக்பால் கஸ்கர், மும்பையில் கட்டப்பஞ்சாயத்துகள் செய்து வருகிறார்.
சலீம் சேக் என்ற எஸ்டேட் புரோக்கரை மிரட்டியதாகவும் தாக்குதல் நடத்தியதாகவும் நேற்று இரவு பைகுல்லா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், தெற்கு மும்பையின் பெந்தி பஜார் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இக்பால் தன்னை மிரட்டியதாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் இக்பால் கஸ்கரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications