எங்களுக்கு இன்றுதான் தீபாவளி: அரவிந்த் கெஜ்ரிவால் ஊர் மக்கள் உற்சாகம்
சண்டிகர்: ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றதை அவரது சொந்த ஊர் மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளிப் பண்டிகைப் போல உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. புதிதாக தொடங்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தலில் 28 இடங்களை கைப்பற்றியது. 15 ஆண்டு கால காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணமாக விளங்கியவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

இந்த வெற்றியை கெஜ்ரிவாலின் சொந்த கிராமத்தில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். தீபாவளி கொண்டாட்டம் போல இது இருந்தது.
அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள சிவானி அவரது சொந்த ஊராகும். அவரது உறவினர்களும், ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் பட்டாசு வெடித்தும், டிரம் அடித்தும் வெற்றியை கொண்டாடினார்கள். காதை பிளக்கும் அளவுக்கு உற்சாமாகமும் கொண்டாட்டம் இருந்தது. பெரும்பாலான தொலைக்காட்சி சேனல்கள் இந்த கொண்டாட்டத்தினை ஒளிபரப்பின.
அப்போது அவர்கள், கெஜ்ரிவால் எங்கள் தலைவர், அவர் மக்களுக்கானத் தலைவர் என்று முழக்கமிட்டனர். பின்னர் பட்டாசு குப்பையை அவர்களின் சின்னமான துடைப்பத்தை வைத்து சுத்தம் செய்தனர்.
இந்த கொண்டாட்டங்களைப் பற்றி பேசிய ஆம் ஆத்மி தொண்டர் மனோஜ் கூறும்போது, "இன்று எங்களுக்கு தீபாவளியாகும். சாதாரணமான எங்கள் தலைவர் அரசியலில் பெரும் தலைவர்களை தோற்கடித்து இருக்கிறார்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications