'கள்ள காதலி'யுடன் வாழ்வதற்காக 'இறந்ததாக' நாடகம்.. ஆம் ஆத்மி பிரமுகர் 'உயிரோடு' சிக்கினார்!
பெங்களூர்: கள்ளக் காதலியுடன் வாழ்வதற்காக இறந்து விட்டது போன்று நாடகமாடி தலைமறைவாக வாழ்ந்து வந்த ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் சந்திர மோகன் ஷர்மாவை பெங்களூருவில் போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஆம் ஆத்மி கட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலராக இருந்தவர் சந்திர மோகன் ஷர்மா. இவர் 3 மாதங்களுக்கு முன்பு டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் காருடன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் அவர் இறந்துவிட்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் சந்திர மோகன் ஷர்மா உயிரிழக்கவில்லை என்றும், பெங்களூரு, நேபாளத்தில் தங்கியிருந்ததற்கான ஆதாரங்களை அவரது செல்போன் மூலம் திரட்டிய மனைவி, இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து நேபாளம் மற்றும் பெங்களூருவுக்கு இரண்டு தனிப்படை போலீசார் விரைந்தன. அப்போது, பெங்களூருவில் அவர் வேறொரு பெண்ணுடன் வசித்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நொய்டா அழைத்து சென்றனர், இறந்துவிட்டதாக ஏமாற்றியதாகவும், காரில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் குறித்தும் புதிய வழக்குகளை சந்திர மோகன் ஷ்ர்மா மீது போலீசார் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications