சி.ஏ.ஏ.வை ஆதரிக்கும் குடியேறிகள்... மேகாலயாவில் பூர்வகுடிகள் கொந்தளிப்பு- வன்முறைகளில் 2 பேர் பலி!
ஷில்லாங்: மேகாலயாவில் சி.ஏ.ஏ. விவகாரத்தில் பூர்வகுடி மக்களுக்கும் குடியேறிய பிற மாநிலத்தவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் ஏற்பட்ட வன்முறைகளில் 2 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் கத்தி குத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுவதும் உயிர்களை பலி கொண்டு வருகிறது. அஸ்ஸாமில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் பலர் பலியாகினர். இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிகள் பலர் மாண்டனர்.

டெல்லியின் வடகிழக்கில் சி.ஏ.ஏ. ஆதரவு என்ற பெயரில் இந்துத்துவா கும்பல் ஆடிய வெறியாட்டத்தில் 35 பேர் பலியாகினர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். தற்போது மேகாலயா மாநிலத்திலும் சி.ஏ.ஏ.வால் வன்முறை வெடித்துள்ளது.
மேகலாயா மாநிலத்துக்குள் பிற மாநிலத்தவர் உள்நுழைய இன்னர் லைன் பெர்மிட் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேகாலயா பழங்குடி மக்களின் தேசிய இன அடையாளம் சிதைக்கப்படாது என கூறப்படுகிறது. ஆனால் மேகாலயாவின் பூர்வ குடிகளைப் பொறுத்தவரை சி.ஏ.ஏ.வை எதிர்க்கின்றனர்.
அதே நேரத்தில் மேகாலயாவில் குடியேறிய பிற மாநிலத்தவர் சி.ஏ.ஏ.வை ஆதரிக்கின்றனர். இதனால் பூர்வகுடிகளுக்கும் குடியேறியவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 2 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் கத்தி குத்தில் படுகாயமடைந்தனர்.
தனால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறைகளைத் தடுக்க மேகாலயாவில் இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மேகாலயாவைப் பொறுத்தவரையில் பூர்வகுடிகளுக்கும் குடியேறிகளுக்குமான பிரச்சனை நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. தற்போது சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வன்முறையாக வெடித்திருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications