நிவாரண முகாம்களில் மட்டும் அல்ல மாளிகைகளிலும் மரணம் ஏற்படுகிறது: உ.பி. அமைச்சர்
லக்னோ: மரணம் என்பது மாளிகைகள் உள்பட எங்கும் ஏற்படுகிறது என்று கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகர் நிவாரண முகாம்களில் மக்கள் இறப்பது குறித்து உத்தர பிரதேச மாநில அமைச்சர் நாரத் ராய் தெரிவித்துள்ளார்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 34 குழந்தைகள் பலியாகினர். நிவாரண முகாம்களில் இறப்புகள் ஏற்படுவது குறித்து ஆய்வு செய்ய மாநில அரசால் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையின் மூலம் இறப்புகள் குறித்த விவரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் நாரத் ராய் கூறுகையில்,
குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள் இறப்பதை தவிர்க்க முடியாது. நிவாரண முகாம்களில் இருப்பவர்கள் தான் இறக்கிறார்கள் என்று இல்லை. மாளிகைகளில் வசிப்பவர்களும் இறக்கிறார்கள். எங்கும் மரணம் ஏற்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications