மெஹபூபா முப்திக்கு ஆதரவு அளிப்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும்.. உமர் அப்துல்லா கருத்து
மெஹபூபா முப்திக்கு ஆதரவு அளிப்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஸ்ரீநகர்: மெஹபூபா முப்திக்கு ஆதரவு அளிப்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி - மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி உடைந்தது. பா.ஜ.க.ஆதரவை வாபஸ் பெற்றதால் காஷ்மீரில் முதல்வர் மெஹபூபா முப்தி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
2016-ம் ஆண்டில் பாஜக - மெஹபூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தது. 89 எம்எல்ஏ.க்கள் கொண்ட காஷ்மீர் சட்டசபையில் பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்கள், மெஹபூபாவின் பிடிபி கட்சிக்கு 28 எம்எல்ஏ.க்கள் உள்ளனர்.

45 எம்எல்ஏக்கள் ஆதரவு
உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு 12 எம்எல்ஏக்களும் உள்ளனர்.காஷ்மீரில் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பிடிபி கட்சிக்கு 45 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது.

விரைவில் முடிவு
இந்நிலையில் மெஹபூபா ராஜினாமா குறித்து தேசிய மாநாடு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். அதாவது மெஹபூபா முப்திக்கு ஆதரவு அளிப்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மகிழ்ச்சி
காஷ்மீரில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி - மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி உடைந்ததற்கு காங்கிரஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தங்கள் குற்றத்தை பா.ஜ.க. ஒத்துக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம்நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆட்சி அமைக்க மாட்டோம்
பிடிபி கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டிய அவசியம் தற்போது எழவில்லை என்றும், ஜம்மு காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் என்றும் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications