பகவத் கீதையை படித்தால் மன அழுத்தம் ஏற்படாது, தேசிய நூலாக்கப்படும்: சுஷ்மா பேச்சு!
டெல்லி: பகவத் கீதையை படிக்கத் தொடங்கினால் மன அழுத்தம் என்பதே ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ். மேலும், விரைவில் தேசிய புனித நூலாக பகவத் கீதை அறிவிக்கப் பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள செங்கோட்டை மைதானத்தில் பகவத் கீதை தொடர்பான விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் அசோக் சிங்கால், ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை தேசியப் புனித நூலாக பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பகவத் கீதை தேசிய புனித நூலாக அறிவிக்கப் படும் என உறுதி அளித்தார்.
மேலும், அவ்விழாவில் சுஷ்மா பேசுகையில், ‘மன அழுத்தத்தை குறைக்க சாக்லேட் சாப்பிடலாம் என்கிறார்கள். சிலர் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால், நீங்கள் பகவத் கீதையை படிக்கத் தொடங்கினால் மன அழுத்தம் என்பதே ஏற்படாது.
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு உள்ளது. இதன் காரணமாக தான் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது பகவத் கீதையை அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்.
எனவே பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிப்பது தொடர்பாக முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் ' எனத் தெரிவித்தார்.
சுஷ்மாவின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ் கூறுகையில், ‘மதப் பிரச்சினையை தூண்டியுள்ள சுஷ்மாவின் கருத்து அற்பமானது. சாத்வி மீதான சர்ச்சையை திசை திருப்பவே சுஷ்மா இவ்வாறு பேசியுள்ளார்' எனத் தெரிவித்துள்ளது.
-
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications