இந்திய ராணுவத்திற்கு ரூ.46,000 கோடி மதிப்புள்ள தளவாடங்கள்.. பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரூ.46,000 கோடி மதிப்புள்ள பாதுகாப்பு தளவாடங்கள் வாங்க, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ரூ.21,000 கோடி மதிப்பில், இந்திய கடற்படைக்காக 111 பல பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் வாங்குவது, உள்ளிட்ட திட்டங்களும் இதில் அடங்கும்.

ராணுவத்திற்கு தேவையான அதிநவீன 150 துப்பாக்கிகளை ரூ.3,364 கோடிக்கு கொள்முதல் செய்வது, மற்ற ராணுவ தளவாடங்கள் வாங்க ரூ.24,879 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் குறிப்பிடத்தக்க வெற்றி இந்த கொள்முதல் ஆகும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளஅளது.
பாதுகாப்பு துறை கொள்முதல் செய்ய உள்ள நவீன துப்பாக்கிகள், இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவில் உருவாக்கப்பட்டதாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications