ஸ்பெக்ட்ரம் வழக்கு: தயாளுவிடம் விரைவில் வாக்குமூலம் பெற சிபிஐக்கு கோர்ட் உத்தரவு!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாளிடம் விரைவில் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.க்கு டெல்லி தனி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு, உடல் நிலை காரணமாக தனி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

மாஜிஸ்திரேட் நியமனம்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 84 வயது தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுவதற்காக, சென்னை தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டை, டெல்லி தனி கோர்ட்டு நீதிபதி நியமனம் செய்து இருந்தார்.

ஏன் தயாளுவிடம் வாக்குமூலம் பெறவில்லை?
இந்த நிலையில், நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் தயாளு அம்மாளிடம் வாக்குமூலம் பெறாமல் இருப்பது பற்றி சுட்டிக்காட்டிய நீதிபதி சைனி, இதனால் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்படுவதாக குறிப்பிட்டார்.

சிபிஐக்கு கோர்ட் உத்தரவு
சென்னையில் உள்ள தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு, தயாளு அம்மாளிடம் விரைவில் வாக்குமூலம் பெற்று அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கும்படி, சி.பி.ஐ.க்கு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

சென்னைக்கும் அனுப்புங்கள்
இந்த உத்தரவின் நகலை உடனடியாக சென்னை மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பி வைக்கும்படியும், அவர் உத்தரவிட்டார்.

சிபிஐ அதிகாரி வாக்குமூலம்
ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு வி.எம்.மிட்டலிடம் நேற்றைய விசாரணையின்போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications