5 லட்சம் லட்டுக்களுடன் வெற்றியைக் கொண்டாடும் பாஜக....
டெல்லி: லோக்சபா தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சுமார் 5 லட்சம் லட்டுகள் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வினியோகிக்கப் பட்டு வருகிறது.
16வது லோக்சபா 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று ஒரே கட்டமாக எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கிடையே தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கணிப்புகளின் படி,பாஜக அதிக இடங்களை வெல்வதற்கு வாப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான ஆயத்த பணிகளை இப்போதே அக்கட்சித் தொடங்கிவிட்டது.
5 லட்சம் லட்டுகள்...
தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் முன்னேற்பாடாக டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் சுமார் 5 லட்சம் லட்டுக்களை வாங்கி வைத்துள்ளனர். பெரும்பான்மையான இடங்களில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அவற்றை தொண்டர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
குஜராத்திலும் கொண்டாட்டம்...
இதேபோல் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் பாரதீய ஜனதா கட்சியினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
.
கொண்டாட்டம்....
பாரதீய ஜனதாவின் வெற்றியை சிறப்பாக கொண்டாடுமாறு அனைத்து மாவட்டங்கள் மற்றும் தாலுகா கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக மாநில பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ஹர்சத் பட்டேல் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.