டெல்லியில் இளம்பெண் பலாத்காரம்: தனியார் நிறுவன உயரதிகாரி கைது!
டெல்லி: டெல்லியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் மின்சார நிறுவனத்தின் உதவி மேலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள பி.எஸ்.இ.எஸ் என்ற தனியார் மின்சார நிறுவனத்தின் உதவி மேலாளராக பணி புரிந்து வரும் கிஷன் தாஸ் (45) என்பவருக்கும், 20 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக அந்த பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். வடக்கு டெல்லி பாவனா பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண்ணை, வேலை சம்பந்தமாக பேசுவதற்கு தெற்கு டெல்லி மகிபால்பூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
இதை நம்பிய அந்த இளம்பெண்ணும் ஓட்டலுக்கு வந்துள்ளார். அப்போது, ஓட்டல் அறையில் வைத்து இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியில் கூறினால் விபரத விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் தாஸ் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளார். ஆனால், வெளியே வந்த இளம்பெண், இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர், ஓட்டல் அறையில் இருந்த கிஷன் தாசை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications