தசரா பண்டிகையின் போது பிரதமர் மோடி, அரவிந்த் கேஜ்ரிவால் உருவ பொம்மையை எரிப்போம் - காங்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய பிரதமர் மோடி, மற்றும் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலைக் கண்டித்து இருவரது உருவ பொம்மையை தசரா பண்டிகையன்று எரிக்கப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் மக்கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Delhi Congress to burn effigies of Kejriwal, Modi on Dussehra

தசரா பண்டிகையின் போது நாடு முழுவதும் ராவணனின் உருவ பொம்மை தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது. அந்த வகையில், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து துன்பத்தை அளித்து வரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரின் உருவ பொம்மையை டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளிலும் எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த உருவ பொம்மைகளின் முகத்தில் பிரதமர் மோடி, மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரின் படங்கள் ஒட்டப்படும்.

நாடு முழுவதும் ராவணனின் உருவ பொம்மை தீ வைத்துக் கொளுத்தப்படும் அதே நேரத்தில் இரண்டு தலை ராவணனாக இவர்களைக் கருதி இருவரின் உருவ பொம்மையும் எரிக்கப்படும் என்று கூறினார்.

மேலும், மத்திய அரசு சரியான நேரத்தில் தலையீடு செய்திருந்தால் பருப்பு விலை இவ்வளவு பெரிய உச்சத்தை அடைந்து இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+