கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஹைகோர்ட்
கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி நடத்திய ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு முறைகேடாக ரூ305 கோடி அன்னிய முதலீடு பெறப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்பிருக்கிறது என கூறி கடந்த மாதம் சிபிஐ-யால் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் சிபிஐ கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே தமக்கு ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி கார்க், நிபந்தனைகளுடன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியுள்ளார்.
Delhi High Court grants bail to #KartiChidambaram in #INXMedia case. pic.twitter.com/XbDriYUc6D
— ANI (@ANI) March 23, 2018












Click it and Unblock the Notifications