நிர்பயா வழக்கில் சிறார் குற்றவாளியின் விடுதலையை தடை செய்ய முடியாது- டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: நிர்பயா எனப்படும் ஜோதி சிங் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இளம் குற்றவாளியின் சிறைத் தண்டனை சட்டப்படி முடிந்து விட்டதால் அவரது விடுதலையை தடுக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறி விட்டது. இதனால் அந்தக் குற்றவாளி திட்டமிட்டபடி டிசம்பர் 20ம் தேதி அதாவது நாளை மறுநாள் விடுதலை செய்யப்படுகிறார்.
ஜோதி சிங் கடந்த 2012ம் ஆண்டு இரவு மிகக் கொடூரமாக ஆறு பேர் கொண் கும்பலால் டெல்லியில் வைத்து ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்காரம் செய்த அந்தக் கும்பல் ஜோதி சிங்கை கொடூரமாக தாக்கவும் செய்தது. அவரது பிறப்புறுப்பில் இரும்புக் குழாயால் தாக்கியதால் அவரது உடல் உள்ளுறுப்புகள் மோசமாக சேதமடைந்தன. இதன் விளைவாக ஜோதி சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கி் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவருக்கு மட்டும் அப்போது வயது 18. இதனால் இளம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கு தனியாக நடத்தப்பட்டது. சிறார் சட்டத்தின் கீழ் அந்தக் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு தண்டனை மட்டுமே கிடைத்தது. தற்போது அந்த சிறுவனின் தண்டனைக் காலம் முடிந்து விட்டதால் 20ம் தேதி விடுதலை செய்யப்படவுள்ளார்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அந்த ஆறு பேரிலேயே இந்த சிறுவன்தான் ஜோதி சிங்கை மிக மோசமான முறையில் சிதைத்த நபர் ஆவார். இவர்தான் இரும்புக் குழாயால் கொடூரமாகத் தாக்கிய நபரும் கூட. இதனால் இந்த சிறுவனின் விடுதலையால் அனைவரும் பெரும் குமுறலுடன் உள்ளனர்.
இந்த நிலையில் சிறுவனின் தண்டனைக் காலம் முடிந்து விட்டதால் சட்டப்படி அவரை காப்பகத்திலேயே தடுத்து வைக்க முடியாது. விடுதலை செய்ய வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னதாக இதுதொடர்பாக சுப்பிரமணியம் சாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. அதில், இது நிச்சயம் தீவிரமான பிரச்சினைதான். அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் சட்டப்படி அந்த குற்றவாளியின் தண்டனை டிசம்பர் 20ம் தேதி முடிவடைகிறது. அதற்கு மேல் காப்பகத்தில் வைத்திருக்க இடமில்லை.
விடுதலைக்குப் பின்னர் அந்த சிறுவனின் மறு வாழ்வு குறித்து தீர்மானிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருடனும் ஆலோசிக்க வேண்டும் என்று கோர்ட் கூறி விட்டது.
தற்போது அநத் பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு வயது 21 ஆகிறது. விடுதலைக்குப் பின்னர் தையல் வேலையில் ஈடுபட விரும்புவதாக அவர் கூறியுள்ளார். அவரை தொடர்ந்த 2 வருடம் கண்காணிப்பில் வைக்க சட்டத்தில் இடம் உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அது எப்படி மேற்கொள்ளப்படும் என்று தெரியவில்லை.
முன்னதாக ஜோதி சிங்கின் தாயார் ஆஷா தேவி இதுகுறித்துக் கூறுகையில், கோர்ட் எங்களைக் கைவிட்டு விட்டது. எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எங்களது முயற்சிகள் பலிக்கவில்லை. அவன் சமூகத்திற்கே பெரிய மிரட்டல் ஆவான். அவனை விடுதலை செய்வதாக இருந்தால் அவனது முகத்தை வெளியுலகிற்குக் காட்ட வேண்டும். அவனை அம்பலப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications