For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாக்குப்பையில் நிர்வாண நிலையில் தலையில்லாத பெண் பிணம்... டெல்லியில் மீண்டும் பயங்கரம்

Google Oneindia Tamil News

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஜனக்பூரி பகுதி பேருந்து நிறுத்தம் அருகே தலையில்லா பெண்ணின் சடலம் கிடந்த சாக்குப்பையை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி ஜனக்பூரி பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தம் அருகே மர்ம சாக்குப்பை ஒன்று ஈ மொய்த்த படியும் கிடப்பதாகவும், அதனை நாய்கள் சுற்றி வந்து மோப்பம் பிடிப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாக்குப் பைக்குள் ஆடைகளற்ற நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் தலையில்லாத உடல் இருந்ததைக் கண்டு பிடித்தனர்.

அப்பெண்ணின் உடம்பில் ரத்த காயங்கள் ஏதும் இல்லை எனத் தெரிவித்த போலீசார் அப்பெண்ணை மர்மநபர்கள் கொலை செய்து சாக்குப்பையில் திணித்து அங்கு போட்டிருக்கலாம் சந்தேகிக்கின்றனர். ஆனால் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப் படவில்லை என போலீசார் மறுத்து உள்ளனர்.

தலையற்ற அப்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள போலீசார் , இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

English summary
Another sensational incident popped out eyes of Delhi police when they recovered the body of a woman whose head was chopped off from her body and was packed inside a bag without clothes on her body.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X