டெல்லியில் காணாமல் போனவரின் உடல் பிரிட்ஜில் கண்டெடுப்பு... துண்டுதுண்டுடாக வெட்டப்பட்ட கொடூரம்
டெல்லியில் சில நாட்களுக்கு முன் காணாமல் போன விபின் ஜோஷியின் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் பிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்டது.
டெல்லி: டெல்லியில் சில நாட்களுக்கு முன் காணாமல் போன விபின் ஜோஷியின் உடல் பிரிட்ஜில் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இவர் கடந்து மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கொல்லப்பட்டு பிரிட்ஜில் கண்டுக்கப்பட்டுள்ளார்.
உத்திரகாண்ட் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் விபின் ஜோஷி. இவர் டெல்லியின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான சைதுலாபாத் என்ற இடத்தில் வசித்து வந்தார் .26 வயது நிரம்பியுள்ள இவருக்கு சைதுலாபாத்தின் சுற்றுவட்டாரத்தில் நண்பர்கள் அதிகம்.
இவர் அதே சைதுலாபாத் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன் வேலைக்கு சென்ற நபர் வீடு திரும்பவில்லை. இவரது மொபைல் போனும் அணைத்து வைக்கப்பட்ட நிலையில் இருந்திருக்கிறது. இதையயடுத்து இவரது உறவினர்கள் போலீசாருக்கு இது குறித்து புகார் அளித்தனர்.
இந்த புகாரின்படி டெல்லி போலீசார் விபின் ஜோஷியை தேடத் தொடங்கினர். அவரது அலுவலகம், நண்பர்கள் என அனைத்து இடங்களிலும் போலீசார் விசாரணை நடத்தினார். இரண்டு நாட்களாக நடந்த இந்த விசாரணையில் தற்போது போலீசார் விபின் ஜோஷியின் உடலைக் கண்டுபிடித்துள்ளனர்.
அவரது நண்பர் ஒருவரின் வீட்டில் இருந்த பிரிட்ஜில் விபின் ஜோஷியின் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து போலீசார் விபின் ஜோஷியின் உடலை பிரேத பரிசோதனைக்காக்க மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இவரைக் கொலை செய்து வீட்டில் மறைத்து வைத்திருந்த இவரது நண்பர் தலைமறைவாகியுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.