நொய்டாவில் டெல்லி போலீஸ் அதிகாரி தற்கொலை- 6வது மாடியில் இருந்து குதித்த மனைவி கவலைக்கிடம்!

Subscribe to Oneindia Tamil

நொய்டா: நொய்டாவில் டெல்லி காவல்துறை துணை ஆணையர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற அவரது மனைவியும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Delhi Police officer shoots himself dead, wife jumps from flat

டெல்லி ஸ்பெஷல் செல்லில் அசிஸ்டெண்ட் கமிஷனராக பணியாற்றி வந்த அமித் சிங், செக்டார் 100 பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவரது மனைவியும் அவரது வீடு அமைந்துள்ள 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

"அவரது மனைவி மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டின் பயிற்சி கேடர் அதிகாரியான அமித் நொய்டாவில் தனது மனைவி மற்றும் 2 வயதான குழந்தையுடன் வசித்து வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாலைமறியல் வன்முறை ஒன்றில் அவர் கடுமையாக தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அப்பகுதிக்கு விரைந்து சென்று அமித்தின் உடலையும், அவரது மனைவியையும் மீட்ட போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+