டெல்லியில் 7 இடதுசாரி கட்சிகள் இணைந்தும் ஒரு இடத்திலும் ஆயிரம் ஓட்டு கூட வாங்கலையே!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளை விட படுமோசமாக தோல்வியைத் தழுவியுள்ளனர் இடதுசாரிகள்.. அதுவும் 7 இடதுசாரி கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்த போதும் எந்த ஒரு தொகுதியிலும் ஆயிரம் ஓட்டு கூட வாங்காத பரிதாப நிலையை சந்தித்துள்ளனர் இடதுசாரிகள்.
டெல்லி சட்டசபை தேர்தலில் 67 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியது. பாரதிய ஜனதா 3 இடங்களைத்தான் வென்றது. காங்கிரஸ் கட்சி முட்டை வாங்கியது.

இத் தேர்தலில் இடதுசாரிகள், மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஓம்பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தளம், சிவசேனா, இந்து மகாசபா ஆகியவையும் போட்டியிட்டும் டெபாசிட்டை முழுமையாக பறிகொடுத்தன.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, இ. கம்யூ.- மா.லெ (விடுதலை), எஸ்.யூ.சி.ஐ.(சி), பார்வார்டு ப்ளாக், புரட்சிகர சோசலிஸ், சோசலிஸ்ட் கட்சி (இந்தியா) ஆகிய 7 இடதுசாரிகள் கட்சிகள் இணைந்து 15 தொகுதிகளில் போட்டியிட்டன. எஞ்சிய 55 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பதாகவும் அறிவித்தனர் இடதுசாரிகள்.
ஆனால் போட்டியிட்ட 15 தொகுதிகளில் ஒன்றில் கூட 1000 ஓட்டுகளைக் கூட இடதுசாரி வேட்பாளர்கள் வாங்கவில்லை. மிக அதிகபட்சமாக எஸ்.யூ.சி.ஐ. வேட்பாளர் ராகேஷ் குமார் என்ற வேட்பாளர் பட்லி தொகுதியில் 947 வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் ரஞ்சித் திவாரி தாம் போட்டியிட்ட கரவால்நகரில் 712 ஓட்டுகளை வாங்கியிருக்கிறார். அப்துல் ஜப்பார் என்ற வேட்பாளர் 644, சஞ்சீவ் குமார் 542 ஓட்டுகளைப் பெற்றனர். எஞ்சிய இடதுசாரி வேட்பாளர் யாரும் 500 ஓட்டுகளைக் கூட பெறவில்லை.
மிகக் குறைவாக ஹரிசங்கர் சர்மா என்ற இடதுசாரி வேட்பாளர் 49, ராகேஷ் சர்மா 52 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
அந்தோ பரிதாபமே!












Click it and Unblock the Notifications