‘எப்போது செயல்படப் போகிறீர்கள்...?’: டெல்லி பிரச்சாரத்தில் மோடியைத் தாக்கிய ராகுல்!
டெல்லி: ஏழைகளைப் புறக்கணித்துவிட்டு, பணக்காரர்களுக்கு உதவும் வகையில் மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நேற்று தனது முதலாவது பிரசாரத்தைத் தொடங்கினார். காங்கிரஸ் சார்பில் சதர் பஜாரில் போட்டியிடும் அஜய் மாக்கன், கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிடுபவரும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளுமான ஷர்மிஸ்டா முகர்ஜி ஆகியோரை ஆதரித்து திறந்தவெளி வேனில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:
மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, எப்போது பேச்சை நிறுத்திவிட்டு செயல்பாடுகளைத் தொடங்கப் போகிறது? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மூன்று, நான்கு தொழிலதிபர்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் இந்த அரசு, ஏழை மக்களை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
காங்கிரஸ், ஏழை மக்களுக்கான கட்சியாக விளங்கி வருகிறது. இத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று தில்லியில் மீண்டும் ஆட்சி அமைப்போம். அடிப்படை தேவைகளாக கருதப்படும் குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை குறைந்த விலையில் தில்லி மக்களுக்கு காங்கிரஸ் அளிக்கும். இதேபோல் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர பணிகளை அளிப்போம். மேலும், ஏழை மக்களுக்கு தங்கும் இடங்களை அளிக்கவும் உறுதி ஏற்போம்' என்றார்.
ராகுல் மேற்கொண்ட பிரச்சாரப் பேரணி, அங்கீகாரமற்ற காலனிகள் வழியாக சென்றது. அப்போது அங்கிருந்த மக்கள், ராகுலிடம் குடிநீர், சுகாதார வசதி உள்ளிட்ட முக்கிய பிரச்னையாக உள்ளதாக புகார் தெரிவித்தனர்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications