டெல்லியில் இன்று “கார்கள் இல்லா தினம்”- சைக்கிள் பேரணியுடன் துவங்கி வைத்தார் கெஜ்ரிவால்!
டெல்லி: டெல்லியில் கார் இல்லாத தினத்தையொட்டி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைத்து அரசு பேருந்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த கார் இல்லாத தினத்தை அறிவிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி டெல்லியில் இன்று முதலாவது கார் இல்லாத தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி செங்கோட்டையில் இருந்து இந்தியா கேட் வரை நடைபெற்ற சைக்கிள் பேரணியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் துணை முதல்வர், அரசு அதிகாரிகள், இளைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
பேரணியில் கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களின் உபயோகத்தை பொதுமக்கள் குறைத்துக்கொள்ள அவர்கள் வலியுறுத்தினர். கார் இல்லாத தினத்தையொட்டி காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பொதுமக்கள் யாரும் கார்களை பயன்படுத்த வேண்டாம் என டெல்லி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தசரா பண்டிகையை காரணம் காட்டி இன்று கார் இல்லாத தினத்தை கடைபிடிக்க டெல்லி காவல் துறை ஆட்சேபம் தெரிவித்தது. ஆனால், கெஜ்ரிவாலின் கோரிக்கையையடுத்து காவல் துறையினர் திட்டமிட்டபடி பேரணி நடத்த உத்தரவு பிறப்பித்தது.












Click it and Unblock the Notifications