கரண்ட் ஷாக் கொடுத்து அடித்தார்கள்.. போலீஸ் டார்ச்சர் குறித்து பள்ளி கண்டெக்டர் வாக்குமூலம்
டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளியில் நடந்த கொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பள்ளி பஸ் கண்டெக்டர் போலீஸ் டார்ச்சர் குறித்து விளக்கி இருக்கிறார்.
டெல்லி: இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். கழுத்தறுக்கப்பட்டு மரணம் அடைந்த அந்த சிறுவனின் பெயர் பிரத்தியுமான் தாக்குர்.
தனியார் பள்ளியில் நடந்த இந்த கொலையில் முதலில் அந்த பள்ளியின் பஸ் கண்டெக்டர் கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த கொலையை செய்தது அதே பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் என சிபிஐ மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் போலீசால் பொய் வழக்கில் சிறை சென்ற பஸ் கண்டெக்டர் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசி இருக்கிறார். மேலும் போலீசின் டார்ச்சர் குறித்தும் பேசியுள்ளார்.

பள்ளி மாணவன் கொலை
டெல்லியின் குர்கான் பகுதியில் இருக்கும் ரேயான் இண்டர்நேஷனல் பள்ளியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரத்தியுமான் தாக்குர் என்ற மாணவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். இதையடுத்து போலீசார் அந்த கொலை குறித்து விசாரணை செய்தனர். முதலில் அந்த பள்ளியின் கண்டெக்டர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். இவர் போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டு பல நாட்கள் விசாரிக்கப்பட்டார்.

வழக்கில் திருப்பம்
அதன்பின் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த கொலைக்கு காரணம் என அதே பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான். மேலும் இந்த கொலை சம்பவத்தில் அந்த பள்ளியின் கண்டெக்டருக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லை என சிபிஐ கூறியது. போலீஸ் வேண்டுமென்றே வழக்கை ஜோடித்ததாக கூறியது. சிபிஐ நடத்திய விசாரணையில் கொலை செய்த 11ம் வகுப்பு மாணவன் தனது கொலையை ஒப்புக் கொண்டான்.

பெயிலில் வந்த கண்டெக்டர்
இந்த நிலையில் பொய் வழக்கில் சிறை சென்ற கண்டெக்டர் 72 நாட்களுக்கு பின் வீடு திரும்பி இருக்கிறார். இவர் தன் மீது பொய் வழக்கு போட்ட ஹரியானா போலீஸ் மீது வழக்க தொடுக்க இருப்பதாக கூறியிருக்கிறார். இவருக்கு ஆதரவாக அவரது ஊர் மக்கள் ஒன்று கூடி இருக்கின்றனர். மேலும் அவரது ஊர் மக்கள் இவருக்காக 50,000 ரூபாய் நிதி திரட்டி கொடுத்து இருக்கின்றனர்.

போலீஸ் செய்த டார்ச்சர்
தற்போது அவர் போலீஸ் செய்த டார்ச்சர் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் '' போலீஸ் என்னை ஒருநாள் கூட தூங்கவிடவில்லை. தலைகீழாக கட்டி கரெண்ட் ஷாக் கொடுத்தார்கள். மேலும் போதை பொருள் கொடுத்து இரவு முழுக்க உடலில் கீறி கொடுமை செய்தார்கள். தினமும் ஆள் மாற்றி ஆள் அடித்து செய்யாத தவறை ஒப்புக் கொள்ள சொன்னார்கள்'' என்று கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications