டெல்லி சட்டசபை தேர்தல்.. கெஜ்ரிவால் கட்சியால் மும்முனைப் போட்டி
டெல்லி: டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவால் கட்சியும் களமிறங்குவதால் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
டெல்லி மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு டிசம்பர் 4-ந் தேதி நடைபெறுகிறது. டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றை மிரட்டும் வகையில் 11 மாத கைக்குழந்தையான கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கியுள்ளது. இதனால் இரு கட்சிகளின் வாக்குகளும் கணிசமான அளவில் பிரிகிறது.

70 தொகுதிகள்...
டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 58 பொதுத் தொகுதிகள்.. தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதிகள் 12.

செல்வாக்கான காங்கிரஸ்
கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40.31% வாக்குகளைப் பெற்றிருந்தது. அதாவது 70 தொகுதிகளில் 43 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது.

துரத்தும் பாஜக
பாரதிய ஜனதா கட்சி 69 தொகுதிகளில் போட்டியிட்டு 23 இடங்களைக் கைப்பற்றியது. அதன் வாக்கு சதவீதம் 36.84%.

மல்லுகட்டும் பகுஜன்
இந்த மாநிலத்திலும் பகுஜன் சமாஜ் 70 தொகுதியில் போட்டியிட்டு 2 இடங்களைக் கைப்பற்றியது பகுஜன்.

மண்ணைக் கவ்விய இடதுசாரிகள்
டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டு அனைத்திலுமே டெபாசிட்டை இழந்தன.

என்.சிபி, ஆர்ஜேடி
டெல்லி சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 16- தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது. இதில் 14-ல் டெபாசிட் இழந்தது. அதேபோல் ராஷ்டிரிய ஜனதா தளம் 11 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியைத் தழுவியது. இதில் 10-ல் டெபாசிட்டை பறிகொடுத்தது.

ஆம் ஆத்மி
தற்போதைய தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு கிலி ஏற்படுத்தக் கூடிய கட்சியாக கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இருக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் இம்மாநிலத்தில் வலுவான மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. பெரும்பாலான தேர்தல் கருத்துக் கணிப்புகளில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்றாலும் ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கு அதிகரித்து கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என்றே சொல்லப்படுவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications