இந்த ஆண்டிலேயே இன்று தான் டெல்லியில் கடுங்குளிர்: நடுங்கும் மக்கள்
டெல்லி: டெல்லியில் இந்த ஆண்டில் இன்று காலை தான் கடுங்குளிராக இருந்தது. இன்று காலை குறைந்தபட்ச வெட்பநிலை 4.2 டிகிரி செல்சியஸாக இருந்தது.
டெல்லியில் கடுங்குளிரும், பனிமூட்டமுமாக உள்ளது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் இந்த ஆண்டிலேயே இன்று காலை தான் டெல்லியில் அதிகம் குளிராக இருந்துள்ளது. இன்று காலை டெல்லியின் குறைந்தபட்ச வெட்பநிலை 4.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

மேலும் இன்று காலை கடும் பனிமூட்டமாகவும் இருந்தது. இதனால் இன்று டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, 14 ரயில்கள் புறப்படும் நேரம் தள்ளி வைக்கப்பட்டது என்று வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இன்று தான் டெல்லியில் மிகவும் குளிராக இருந்தது. கடும் பனிமூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியவில்லை. இன்னும் சில நாட்களுக்கு இப்படித் தான் இருக்கும் என்றார்.
இன்று டெல்லியில் வானம் தெளிவாக இருந்தாலும் அதிகபட்ச வெட்பநிலை 18 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications