தமிழகத்தை வஞ்சிப்பது ஏன்?: டெல்லி வாழ் தமிழர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டம்
தமிழகத்தை வஞ்சிப்பது ஏன் என்று கேட்டு டெல்லி வாழ் தமிழர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video

டெல்லி: தமிழகத்தை வஞ்சிப்பது ஏன் என்று கேட்டு டெல்லி வாழ் தமிழர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்துள்ளது. அரசியல் கட்சிகளு்ம, விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தமிழகமே போராட்டக் களமாக மாறியுள்ளது. காவிரி வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

டெல்லி வாழ் தமிழர்கள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று டெல்லி வாழ் தமிழர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலையில் ராஜீவ் சவுக் கேட் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்
நாம் தமிழ் தில்லி என்ற தமிழ் அமைப்பினர் ஒருங்கிணைந்த இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடுக என்ற கோஷம் விண்ணை பிளந்தன. தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

குழந்தைகள் ஏந்திய பதாகைகள்
இந்த போராட்டத்தின்போது குழந்தைள்,இளைஞர்கள் பதாகைகளை ஏந்தியிருந்தனர். அதில் தமிழகத்தை வஞ்சிப்பது ஏன், விளையாட்டா , விவசாயமா, விவசாயிகளை தற்கொலையிலிருந்து காப்பாற்று, நீர் இல்லையேல் உழவு இல்லை, உழவு இல்லையேல் உணவு இல்லை ஆகிய பதாகைகள் ஏந்தப்பட்டன.

நாம் தமிழ் அமைப்பினர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக போராட்டத்தை ஒருங்கிணைத்த நாம் தமிழ் அமைப்பினர் நாடாளுமன்ற சாலையில் பேரணியும் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சின்னஞ்சிறு குழந்தை ஒன்றின் தலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுக என்று பேப்பரில் எழுதி ஒட்டிருந்தனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications