என் மகளோடு சேர்த்து என்னையும் தகனம் செய்யுங்கள்: டெல்லி பெண்ணின் கடைசி ஆசை
டெல்லி: டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது இரண்டு வயது மகளை கொலை செய்து விட்டு தானும் தூக்கு போக்கு தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கு டெல்லியில் உள்ள ரஜௌரி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் சதா. அவரின் மனைவி விதி. அவருக்கு பிரசவம் நடக்கையில் ஏற்பட்ட சிக்கலால் அவர்களின் மகள் குர்னீர் உடல்நலக்குறைவோடு பிறந்தார். லட்சக் கணக்கில் செலவு செய்தும் குழந்தையின் உடல்நலம் சரியாகவில்லை.

குர்னீருக்கு 2 வயதாகியுள்ளது. மருத்துவமனையும், மருந்தும், வலியுமாக குர்னீர் வளர்வதை பார்க்க முடியாமல் விதி தவித்தார். தனது குழந்தைக்கு இனியும் உடல் நலம் சரியாகாது என்று நினைத்த விதி அது வாழ்நாள் முழுவதும் வேதனைப்படாமல் இருக்க தீர்வு காண விரும்பினார்.
இதையடுத்து விதி கடந்த திங்கட்கிழமை குழந்தையை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். பின்னர் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அலுவலக வேலை முடிந்து இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்த பிரதீப் கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது மனைவியும், மகளும் இறந்து கிடந்ததை பார்த்து பிரதீப் அதிர்ச்சி அடைந்தார்.
விதி தான் தற்கொலை செய்யும் முன்பு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
என் குழந்தை படும் அவஸ்தையை பார்க்க முடியாமல் தான் இப்படி செய்கிறேன். எங்களின் முடிவுக்கு யாரும் காரணம் இல்லை. தயவு செய்து என் உடலை என் மகளின் உடலோடு சேர்த்து தகனம் செய்யுங்கள். என் நகைகளை ஏழைகளுக்கு அளித்து விடுங்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications