For Daily Alerts
Just In
4 வருடத்தில் “ஹைடெக்” சிட்டியாகும் டெல்லி நகரம்- கெஜ்ரிவால் வாக்குறுதி
டெல்லி: டெல்லியில் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிப்படி அந்நகரம் உலக தரம் வாய்ந்த நகரமாக மாற்றி அமைக்கப்படும் என மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், "தலைநகர் டெல்லியை உலக தரம் வாய்ந்த நகரமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதற்காக ஐந்து வருடங்கள் வரை காத்திருக்க தேவையில்லை நான்கு வருடங்களில் இந்த சாதனையை நிகழ்த்த முடியும்.
இதற்காக சாலை உட்பட பல்வேறு பணிகளில் இயந்திரமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்படும். பல்வேறு நிறுவனங்களும், புதிய கட்டுமானங்களும் மேம்படுத்தப்படும்.
இதனால் பல்வேறு துறையில் உள்ள பணியாளர்கள் பணி பறிபோய் விடுமோ என அஞ்ச தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Chief Minister Arvind Kejriwal on Thursday promised to make Delhi a world class city in "just four years" and stressed the need for adopting technology, but without any loss of jobs, to ensure cleanliness in the national capital.
Story first published: Friday, June 5, 2015, 8:02 [IST]