ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இந்திய பொருளாதாரம் பாதிக்கவில்லையாம்.. சொல்கிறார் உலக வங்கி சிஇஓ
ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்று உலக வங்கியின் தலைமைச் செயல் அதிகாரரி கிருஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.
டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்று உலக வங்கியின் தலைமைச் செயல் அதிகாரரி கிருஸ்டாலினா ஜார்ஜியாவா தெரிவித்துள்ளார்.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிப்பதாக கூறி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி 500ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து பழைய 500 ரூபாய் மற்றும் 1000ரூபாய் நோட்டுக்களை கடந்த ஆண்டு டிசம்பர் 31 ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களின் வங்கி கணக்கில் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது .

இதனைத்தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்து புழக்கத்தில் விட்டது. இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கபட்டுள்ளதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்ச்சித்து வருகிறது. ஆனால் இந்திய அரசு செயல்படுத்தியிருக்கும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, எதிர்பார்த்த பலனை தர போவதாக உலக வங்கியின் தலைமைச் செயலர் அதிகாரி கிருஸ்டாலினா ஜார்ஜியாவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
இந்தியாவில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பிற நாடுகள் படித்து தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
இந்த நடவடிக்கையால் கருப்பு பணப் புழக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இந்தியா மாறியுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், பண தட்டுப்பாடு நிலவியது, ஆனால் இதற்கு இந்திய மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். மேலும் புதிய நோட்டுகள் புழக்கத்தில் வரும் வரை மக்கள் பொறுமையாக இருந்த மக்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
குறுகிய கால அளவில் பார்க்கும்போது, பணமதிப்பிழப்பு செய்தது அவசியமற்றதாக இருக்கலாம், ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் இந்தியப் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியை அடைய இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவும். இதனால் இந்திய பொருளாதாரம் எவ்வித பாதிப்பையும் அடையவில்லை .
இவ்வாறு கிறிஸ்டலினா ஜார்ஜியாவா கூறினார். .
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications