For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இந்திய பொருளாதாரம் பாதிக்கவில்லையாம்.. சொல்கிறார் உலக வங்கி சிஇஓ

ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்று உலக வங்கியின் தலைமைச் செயல் அதிகாரரி கிருஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.

By Vazhmuni
Google Oneindia Tamil News

டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்று உலக வங்கியின் தலைமைச் செயல் அதிகாரரி கிருஸ்டாலினா ஜார்ஜியாவா தெரிவித்துள்ளார்.

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிப்பதாக கூறி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி 500ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து பழைய 500 ரூபாய் மற்றும் 1000ரூபாய் நோட்டுக்களை கடந்த ஆண்டு டிசம்பர் 31 ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களின் வங்கி கணக்கில் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது .

Demonetisation will have positive impact on Indian economy, says World Bank CEO

இதனைத்தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்து புழக்கத்தில் விட்டது. இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கபட்டுள்ளதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்ச்சித்து வருகிறது. ஆனால் இந்திய அரசு செயல்படுத்தியிருக்கும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, எதிர்பார்த்த பலனை தர போவதாக உலக வங்கியின் தலைமைச் செயலர் அதிகாரி கிருஸ்டாலினா ஜார்ஜியாவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

இந்தியாவில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பிற நாடுகள் படித்து தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

இந்த நடவடிக்கையால் கருப்பு பணப் புழக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இந்தியா மாறியுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், பண தட்டுப்பாடு நிலவியது, ஆனால் இதற்கு இந்திய மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். மேலும் புதிய நோட்டுகள் புழக்கத்தில் வரும் வரை மக்கள் பொறுமையாக இருந்த மக்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

குறுகிய கால அளவில் பார்க்கும்போது, பணமதிப்பிழப்பு செய்தது அவசியமற்றதாக இருக்கலாம், ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் இந்தியப் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியை அடைய இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவும். இதனால் இந்திய பொருளாதாரம் எவ்வித பாதிப்பையும் அடையவில்லை .

இவ்வாறு கிறிஸ்டலினா ஜார்ஜியாவா கூறினார். .

English summary
Prime Minister Narendra Modi’s decision to ban high-value banknotes as part of efforts to stamp out corruption will have a profound and positive impact on India’s economy, World Bank CEO Kristalina Georgieva has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X