மோடி பதில் தரவேண்டும்... 5வது நாளாக ராஜ்யசபாவை முடக்கிய எதிர்கட்சிகள்- அனலடிக்கும் குளிர்கால கூட்டம்
ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா துணை தலைவர் குரியன் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். 5 வது நாளாக அவை நடவடிக்கைகள் முடங்கின.
டெல்லி: ரூபாய் நோட்டு செல்லாத விவகாரத்தில் மோடி பதிலளிக்க கோரி எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதை அடுத்து ராஜ்யசபா துணை தலைவர் குரியன் அவையை 5வது நாளாக இன்று ஒத்திவைத்தார்.
கடந்த 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு, 15 நாட்களாகியும் இதுவரை பணத்தட்டுப்பாடு தீரவில்லை. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் பேசிய அவர், பிரதமர் மோடி நாட்டு மக்களை வீதிக்கு கொண்டு வந்து விட்டதாக குற்றம்சாட்டினார். 90 சதவிகித மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த புதன்கிழமை தொடங்கியது. ரூபாய் நோட்டு விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ராஜ்யசபாவைப் பொருத்தவரை பிரதமர் மோடி நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாள்தோறும் இந்த விவகாரத்தை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. 5வது நாளான இன்றும் எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடிக்கு எதிராக கூச்சலிட்டனர். சபாநாயகர் இருக்கை அருகே சென்று கூச்சலிட்டனர். பதிலுக்கு பாஜக உறுப்பினர்களும் கூச்சலிட்டனர். இதனால் அவையில் அமளி துமளி ஏற்பட்டது. தொடர்ந்து கூச்சலும் குழப்பமும் நிலவவே அவர்களை சமாதானம் செய்ய முயன்றார் குரியன். ஆனால் அது முடியாமல் போகவே அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கி வருகின்றன. குளிர்காலக் கூட்டத் தொடரில் எதிர்கட்சியினர் அனலை கிளப்பி வருகின்றனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications