வாரனாசியில் ஜிம்முக்கு சென்றபோது துணை ஜெயிலர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
வாரனாசி: உத்தர பிரதேசத்தில் துணை ஜெயிலரை மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் சுட்டுக் கொன்றுவிட்டனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரனாசி மாவட்ட சிறையில் துணை ஜெயிலராக இருந்தவர் அனில் தியாகி. இந்த சிறைக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பணியமர்த்தப்பட்டார். நேர்மைக்கு பெயர் போனவர் அனில். இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு அனில் வாரனாசியில் உள்ள வைரஸ் ஜிம்னாசியத்தில் உடற்பயிற்சி செய்ய சென்றுள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டனர். ஜிம்முக்கு வெளியே படுகாயமடைந்து கிடைந்த அனிலை அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications