காவிரியில் கட்டப்படும் அணையால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை – முன்னாள் பிரதமர் தேவகவுடா
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: காவேரியில் கர்நாடகா புதிய அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
பிரச்சினைக்குரிய மேகதேதாட்டு பகுதியை பார்வையிட்ட பின்னர் பேசிய அவர், "இப்பகுதியை சுற்றி அமைந்துள்ள கோலார், சிக்பள்ளாபூர், ராமநகர், பெங்களூரு பகுதிகளின் குடிநீர் தேவைக்காக அணை கட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்படாத நிலையில் தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படுவது சரியல்ல.
மேலும் உபரி நீர் மட்டுமே புதிய அணையில் தேக்கி வைக்கப்படுவதால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட போவதி்ல்லை. தமிழகத்தில் காணப்படும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை கர்நாடகாவில் இல்லை" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications