கோர்ட் உத்தரவு.. இன்டர்சிட்டி ரயிலை நடு வழியில் நிறுத்தி ஜப்தி செய்த அதிகாரிகள்! பயணிகள் அதிர்ச்சி
பெங்களூர்: விவசாயிகளுக்கு நிலத்திற்கான இழப்பீடு தர தாமதம் செய்த ரயில்வே துறைக்கு எதிராக சாட்டையை வீசிய கோர்ட், ரயிலை ஜப்தி செய்ய உத்தரவிட்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், ஹரிகரே-கொட்டூர் நகரத்தின் நடுவே ரயில்வே பாதை அமைக்கும் பணியின்போது, விவசாயிகளிடமிருந்து ரயில்வே துறை நிலம் கையகப்படுத்தியது. இதற்கு இழப்பீடாக சிவகுமார் என்ற விவசாயிக்கு ரூ.37 லட்சத்தை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 2 வருடங்களாக இந்த இழப்பீடு தொகையை வழங்கவில்லை ரயில்வே துறை.

இதை எதிர்த்து சிவகுமார் கோர்ட் உதவியை நாடினார். வழக்கை விசாரித்த ஹரிகரே நகர கோர்ட், தார்வார்-மைசூர் இன்டர்சிட்டி ரயிலை ஜப்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இரு தினங்கள் முன்பு ஜப்தி நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
தார்வாரிலிருந்து, ஹரிகரேவுக்கு காலை 8 மணிக்கு இந்த ரயில் வந்தபோது அதிகாரிகள், அதற்கு மேல் ரயிலை நகர விடாமல் தடுத்துவிட்டனர். ரயில் பைலட்டை கீழே இறக்கிவிட்டனர். சுமார் 1 மணி நேரமாக ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.
இதனிடையே, ஒரு வாரத்திற்குள் விவசாயிகளுக்கு உரிய பணத்தை வழங்குவதாக, ரயில்வே மேலாண் இயக்குநர் உறுதியளித்த பிறகு ரயில் இயக்கப்பட்டது. ரயிலையே ஜப்தி செய்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications